39. அருள்மிகு தாமரையாள் கேள்வன் கோயில்
மூலவர் தாமரையாள் கேள்வன்
உத்ஸவர் பார்த்தஸாரதி
தாயார் தாமரை நாயகி
திருக்கோலம் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் சங்க ஸரஸ் கங்கா தீர்த்தம்
விமானம் நாராயண விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருப்பார்த்தன்பள்ளி, தமிழ்நாடு
வழிகாட்டி திருநாங்கூர் திவ்யதேசம் என்று அழைக்கப்படுகிறது. சீர்காழியில் இருந்து 11 கி.மீ. தொலைவிலும், திருவெண்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருவெண்காட்டிலிருந்து கீழைத் திருக்காட்டுப்பள்ளி போகும் சாலையில் சென்று பின்னர் கைகாட்டி பார்த்து இடதுபுறம் உள்ள தெருவில் சென்றால் கோயிலை அடையலாம்.
தலச்சிறப்பு

Parthanpalli Gopuram Parthanpalli Moolavarசிவபெருமான் தனது ஏற்படட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட 'ஏகாதச ருத்ர' யாகம் ஒன்றை நடத்தினார். பூர்ணாஹுதி சமயத்தில் மகாவிஷ்ணு பிரம்மாதி தேவர்களுடன் ஸேவை சாதித்தார். சிவபெருமான் வேண்டுகோளுக்கு இணங்க, விஷ்ணு பதினோரு ரூபத்துடன், ருத்திரனுடன் நித்யவாஸம் செய்யும் ஸ்தலம்தான் திருநாங்கூர் திவ்ய தேசங்கள். இவை மொத்தம் 11 கோயில்கள்.

மூலவர் 'தாமரையாள் கேள்வன்' என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் பார்த்தஸாரதி. தாயார் 'தாமரை நாயகி' என்று வணங்கப்படுகின்றார். பார்த்தன், வருணன், ஏகாதச ருத்ரர்கள் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.

அர்ஜுனன் தீர்த்த யாத்திரை வரும்போது, இத்தலத்திற்கு வந்தவுடன் தாகம் எடுத்தது. அங்கு தவம் செய்துக் கொண்டிருந்த அகத்திய முனிவரிடம் கேட்க, அவர் தமது கமண்டலத்தை எடுத்தார். ஆனால் அவரது கமண்டலத்தில் நீர் வற்றிப்போக, தமது ஞானதிருஷ்டியால் இது கண்ணபிரான் லீலை என்று உணர்ந்தார். அவர் அர்ஜுனனை நோக்கி, 'நீ, எந்த உதவியாக இருந்தாலும் கண்ணனனிடம் தானே கேட்பாய்' என்று கூறியதும், அர்ஜுனனும் கண்ணனை நினைந்து, தனது கத்தியால் அங்கு தோண்ட, கங்கை பெருகியது.

பார்த்தனுக்காக உண்டான கோயிலாததால் 'பார்த்தன்பள்ளி' என்று பெயர் பெற்றது. வருணன் திருமாலை நோக்கி இங்கு தவமிருந்தான். அவனது வேண்டுகோளுக்கிணங்க, பகவான் பார்த்தஸாரதியாக அவனுக்குக் ஸேவை சாதித்தார்.

தை மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் நடக்கும் கருடசேவை மிக விசேஷம். திருமணிமாடக் கோயில் வாசலில் 11 திவ்யதேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, அங்கு திருமங்கையாழ்வாருக்கும், அவரது பத்தினி குமுதவல்லிக்கும் மரியாதைகள் நடந்து பின்னர் வீதி புறப்பாடு நடக்கும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com